ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு தாங்கள் பிரிந்து வாழப் போவதாக அறிவித்துள்ளனர். இந்தநிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் அதுகுறித்து வெளியிட்ட பதிவில், எங்களுடைய தனி உரிமையை அனைவரும் மதிக்க வேண்டும். உங்கள் புரிதலுக்கு நன்றி என பதிவிட்டு இருக்கிறார்.
அதையடுத்து ஏ. ஆர். ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா வெளியிட்டுள்ள பதிவில், ‛அனைவரும் மனதை திடமாக வைத்திருங்கள். கடவுள் உங்களுக்கும் உங்களது குடும்பத்துக்கும் இதை தாங்கக்கூடிய மன வலிமையை கொடுப்பார்' என்று பதிவிட்டுள்ளார்.
அதையடுத்து அவர்களது இளைய மகளான ரஹீமா வெளியிட்டுள்ள பதிவில், ‛இந்த விஷயத்தை தனி உரிமை மற்றும் மரியாதை உடன் நடத்தியதற்கு நன்றி. உங்கள் அனைவரது கருத்துக்கும் நன்றி' என பதிவு போட்டுள்ளார்.