ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

10 ஆண்டுகளுக்கு முன்பு மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார். ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வெளியாக இருந்த நிலையில் படத்தை வெளியிட தடை கோரி பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 'இரண்டாம் குத்து' படத்தின் விநியோக உரிமையை பெற்ற ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் (பிசாசு 2 தயாரிப்பாளர்) பாக்கி வைத்திருந்தது. ஐகோர்ட் உத்தரவுப்படி இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர், ஒரு கோடியே 17 லட்சம் மற்றும் ஜி.எஸ்.டி. தொகை 31 லட்சம் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டும் பணத்தை தரவில்லை. எனவே, பிசாசு-2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 'பிசாசு-2' திரைப்படத்தை வெளியிட தடை விதித்தது. மேலும், இந்த மனு தொடர்பாக ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளிவைத்தது.




