சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தற்போது தமன்னாவுக்கு தமிழில் படங்கள் இல்லாத நிலையில் ஹிந்தி, தெலுங்கில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மகாதேவ் ஆன்லைன் கேமிங் செயலியின் துணை செயலியான 'பேர்ப்ளே' என்ற விளம்பரத்தில் நடித்திருந்தார் தமன்னா. இது ஒரு சட்ட விரோத செயலியாகும். அதோடு இந்த செயலி மீது கடந்த ஆண்டில் பண மோசடி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அது குறித்த விசாரணை நடந்துவரும் நிலையில் அந்த செயலி சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகை தமன்னாவுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமன்னாவிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு பிறகு அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார் தமன்னா. அதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.