தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |
ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் ‛ஜெயிலர்' போல மிகப்பெரிய அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் படம் மோசம் இல்லை, நன்றாக இருக்கிறது என்பது போன்று ரசிகர்களிடமும் விமர்சிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து முதன்முறையாக நடிக்கும் வாய்ப்பை மஞ்சு வாரியர், அபிராமி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் போன்ற நடிகைகள் பெற்றுள்ளனர். இதில் நடிகை ரித்திகா சிங் படம் முழுவதும் ரஜினியுடன் இணைந்து பயணிக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து சிலாகித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரித்திகா சிங்.
இது குறித்து அவர் கூறும்போது, “படப்பிடிப்பு தளத்தில் தன்னை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரையும் ரஜினிகாந்த் எந்த அளவிற்கு வசதியாக உணரும்படி செய்கிறார் என்பதை நேரிலேயே பார்த்து பிரமித்து போனேன். அவருடைய பார்வையும் அந்த புன்னகையுமே அருகில் இருப்பவர்களின் மனதில் இருக்கும் கஷ்டங்களை போக்கும் அளவிற்கு வலிமையானவை. இன்னொரு ரஜினிகாந்த் வேறு எங்கேயும் இல்லை. அவரைப் போன்ற மனிதநேயமிக்க ஜாம்பவானையும் எங்கேயும் பார்க்க முடியாது. ஒருவேளை புதிதாக ஒரு பிரபஞ்சமே படைக்கப்பட்டாலும் கூட இவர்தான் இருப்பாரே தவிர இன்னொரு தலைவர் ரஜினி இருக்கப் போவதில்லை” என்று தனது பிரமிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.