இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் ‛ஜெயிலர்' போல மிகப்பெரிய அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் படம் மோசம் இல்லை, நன்றாக இருக்கிறது என்பது போன்று ரசிகர்களிடமும் விமர்சிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து முதன்முறையாக நடிக்கும் வாய்ப்பை மஞ்சு வாரியர், அபிராமி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் போன்ற நடிகைகள் பெற்றுள்ளனர். இதில் நடிகை ரித்திகா சிங் படம் முழுவதும் ரஜினியுடன் இணைந்து பயணிக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து சிலாகித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரித்திகா சிங்.
இது குறித்து அவர் கூறும்போது, “படப்பிடிப்பு தளத்தில் தன்னை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரையும் ரஜினிகாந்த் எந்த அளவிற்கு வசதியாக உணரும்படி செய்கிறார் என்பதை நேரிலேயே பார்த்து பிரமித்து போனேன். அவருடைய பார்வையும் அந்த புன்னகையுமே அருகில் இருப்பவர்களின் மனதில் இருக்கும் கஷ்டங்களை போக்கும் அளவிற்கு வலிமையானவை. இன்னொரு ரஜினிகாந்த் வேறு எங்கேயும் இல்லை. அவரைப் போன்ற மனிதநேயமிக்க ஜாம்பவானையும் எங்கேயும் பார்க்க முடியாது. ஒருவேளை புதிதாக ஒரு பிரபஞ்சமே படைக்கப்பட்டாலும் கூட இவர்தான் இருப்பாரே தவிர இன்னொரு தலைவர் ரஜினி இருக்கப் போவதில்லை” என்று தனது பிரமிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.