20 அடி ஆழத்தில் ஆடையின்றி நடித்த ஆர்யா | பிளாஷ்பேக்: மாற்றங்கள் பல கடந்து, மகத்தான வெற்றியைப் பதிவு செய்த எம் ஜி ஆரின் “ரிக்ஷாக்காரன்” | போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி உருவாகியுள்ள 'முதற்கனல்' | சமந்தா படத்தின் முதல் சிங்கிள் ஏப்., 19ல் வெளியீடு | ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புராண படம் | 'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? அந்த 3 இயக்குனர்களும் பிஸியாமே? | ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் |

தமிழில் திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் படங்கள் வெற்றி பெற்றாலும் ஜாதி குறித்து படம் இயக்கி வெற்றி பெறுகிறார் என்கிற கருத்தும் இவர் மீது உள்ளது.
அண்மையில் மூன்றாவது முறையாக நடிகர் ரிச்சர்ட் ரிஷி, மோகன். ஜி கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என அறிவித்தனர். பட விழா ஒன்றில் பங்கேற்ற இவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “என்னுடைய புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்குகிறது. தீபாவளிக்கு இந்த படத்தின் தலைப்பு வெளியாகும். நானும், ரிச்சர்ட்டும் மீண்டும் இணைந்துள்ள இப்படம் எங்களுடைய சக்திக்கு மீறிய படமாக உருவாகிறது.
இந்தியா முழுவதும் பேசும் படமாக இது இருக்க வேண்டும் என நினைத்து பணியாற்றி வருகிறோம். தற்போது படத்தின் நாயகிக்கான தேர்வு நடைபெறுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அடுத்தகட்ட அப்டேட்டுகள் வெளியாகும். ஒரு வருட இடைவெளிக்கு காரணம் பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் பெற்றேன். ஆனால், அந்த படம் துவங்க காலதாமதம் ஆகிறது. தற்போது என்னுடைய ஸ்டைலில் ஒரு படம் இயக்கி வருகிறேன் என தெரிவித்து வந்து விட்டேன்” என்றார்.
மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவர் பேசும்போது, ‛‛தமிழகத்தில் இளைஞர்களுக்கு பிடித்தவர் அரசியல் தலைவராக வருவது நல்லது தான். ஆனால் விஜய் தவறான ரூட்டில் செல்கிறார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை, ஆனால் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்கிறார். இது வருத்தமாக உள்ளது'' என தெரிவித்தார்.




