கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கோட். செப்டம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். வெங்கட் பிரபு அளித்த ஒரு பேட்டியில் கோட் படத்தின் கதை குறித்து கூறும் போது, இந்த படத்தின் கதையை டிரைலரிலேயே சொல்லி விட்டேன். என்றாலும் அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. அதோடு இந்த படத்தின் காட்சிகள் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு திரைக் கதையை உருவாக்கி இருக்கிறேன். அஜித் நடிப்பில் நான் இயக்கிய மங்காத்தா துரோகத்தை வெளிப்படுத்தும் கதையில் உருவாகியிருந்தது. ஆனால் இந்த கோட் படத்தை காந்தி என்ற நபரின் வாழ்க்கையில் நடந்த ஒரு குடும்ப கதையில் உருவாக்கி இருக்கிறேன். மங்காத்தா படத்தை விட இந்த கோட் படம் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் வெங்கட் பிரபு.