சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கடந்த சில வருடங்களாகவே தென்னிந்திய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கேஜிஎப் 2, லியோ ஆகிய படங்களில் மாஸ் காட்டிய சஞ்சய் தத் தற்போது தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள டபுள் ஐ ஸ்மார்ட் என்கிற படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இது தெலுங்கில் அவருக்கு முதல் படம். இந்த படத்தில் கதாநாயகனாக ராம் பொத்தினேனி நடிக்க, கதாநாயகியாக காவ்யா தாப்பர் நடித்துள்ளார். பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து நடிகை சார்மி கவுர் தயாரித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 15ல் இந்த படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் இதன் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகையுமான சார்மி கவுர் பேசும்போது, “நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகை நான். சமீபகாலமாக தென்னிந்திய படங்களில் அவர் பிஸியாக நடித்து வருகிறார். அதனால் பூரி ஜெகன்நாத் டைரக்ஷனில் அடுத்தடுத்த வித்தியாசமான ஏழு படங்களில் நடிக்க முன்கூட்டியே சஞ்சய் தத்தை நாங்கள் ஒப்பந்தம் செய்து இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.