சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
நடிகை மீரா ஜாஸ்மின் தமிழில் ரன், சண்டக்கோழி, ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தொடர்ந்து மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்திலும் பிஸியான நடிகையாக மாறி படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் காதல் கிசுகிசு, பின்னர் திருமணம் ஆகியவற்றால் பட வாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு சில வருடங்கள் ஒதுங்கினார். அதன் பிறகு தற்போது கடந்த சில வருடங்களாக மீண்டும் நடித்து வரும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் பாலும் பழமும் என்கிற படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் மலையாள குணச்சித்திர நடிகர் இர்ஷாத் என்பவர் மீரா ஜாஸ்மினுடன் தான் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.. அது மட்டுமல்ல 'பாடம் ரெண்டு சல்லாபம்' என்கிற வார்த்தையையும் குறிப்பிட்டுள்ளார். இதை ஏன் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது ரசிகர்கள் பலரும் அறிந்ததே.. கடந்த 2003-ல் இயக்குனர் டிவி சந்திரன் இயக்கத்தில் வெளியான ‛பாடம் ஒன்னு ஒரு விலாபம்' என்கிற படத்தில் மீரா ஜாஸ்மினின் கணவராக நடித்திருந்தார் நடிகர் இர்ஷாத்.
அந்த படம் மீரா ஜாஸ்மினுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் கேரள அரசின் மாநில விருதையும் பெற்று தந்தது. இத்தனை வருடங்கள் கழித்து இவர்கள் சந்தித்து இருப்பதும், நடிகர் இர்ஷாத் இதுபோன்று ஒரு வார்த்தையை குறிப்பிட்டு இருப்பதை பார்க்கும்போதும் ஒருவேளை இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இவர்கள் மீண்டும் இணைந்து இருக்கிறார்களோ என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.