25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
விஷால் நடித்த 'திமிரு' படத்தில் வில்லியாக நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. அந்தப் படம்தான் அவரைப் பிரபலப்படுத்தியது. பின்னாளில் நிஜ வாழ்க்கையில் அவரே விஷாலுக்கு அண்ணியாகவும் வந்தார். ஸ்ரேயா ரெட்டி பின்னர் “வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம், சில சமயங்களில், சலார்” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
'சுழல்' வெப் சீரிஸில் நடித்தவர் அடுத்து 'தலைமைச் செயலகம்' வெப் சீரிஸில் கொற்றவை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்புப் பற்றி பலரும் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் வெப் சீரிஸின் இயக்குனர் வசந்தபாலன் அவரது முகப்புத்தகத்தில், “கொற்றவை ( sriya reddy ) Very powerful presence. படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் முதல்பட கதாநாயகி போல பதட்டமாக என்னிடம் "நல்லா வருதுல்ல! எப்படி வருது ? நீங்க happy-ஆ? சுழல் அளவுக்கு பேர் வாங்கிடுமா? அதை விட கம்மியா? இல்ல அதிகமா? விலங்கு, அயலி அளவுக்கு வெற்றியடையுமா? உங்களுக்கு புரொடக்சன் சப்போர்ட் பண்றாங்களா? சேனல் happy-ஆ? " என்று ஆங்கிலம் கலந்த தமிழில் ஒரு நாளைக்கு பல்வேறு வார்த்தைகளில் சுத்தி சுத்தி இணையத்தொடரின் தரம், வெற்றி பற்றிய அக்கறையுடனே கேள்வி கேட்டபடியிருப்பார்கள்.
என் மேல் கொண்ட நம்பிக்கையிலே மட்டுமே இந்த தொடரில் நடிக்க சம்மதித்தார்கள். அவரை நடிக்க விடாமல் ஆயிரம் சக்திகள் இடையூறு செய்த போதும் I will do only for vasanthabalan என்று சொல்லி விட்டு எனக்காக தொடருக்குள் வந்தார்கள். தொடரின் வெற்றியில் முதல் மகிழ்ச்சி கொற்றவை தான்,” எனப் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரேயா ரெட்டியை இத்தொடரில் நடிக்க விடாமல் இடையூறு செய்த அந்த ஆயிரம் சக்திகள் யார் என்பதை இயக்குனர் வசந்தபாலன் சொல்வாரா ?.