Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அர்ஜுனிடம் வாங்கிய அட்வான்ஸை இரு மடங்காக திருப்பிக் கொடுத்தேன் : நடிகர் விஸ்வக் சென்

22 பிப், 2024 - 15:09 IST
எழுத்தின் அளவு:
I-returned-double-the-advance-I-got-from-Arjun-:-Actor-vishwak-sen

நடிகர் அர்ஜுன் திரையுலகில் தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு வெளிச்சம் போட்டு தரும் விதமாக அவரை கதாநாயகியாக வைத்து சொல்லி விடவா என்கிற படத்தை இயக்கினார். அதை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் தனது மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடிக்க, வளர்ந்து வரும் இளம் நடிகர் விஸ்வக் சென்-ஐ கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்க தயாரானார். ஆனால் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாகவே அர்ஜுனுக்கும், விஸ்வக் சென்னுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படம் அப்படியே நிறுத்தப்பட்டது.

விஸ்வக் சென் தனது தொழில் மீது சரியான மரியாதை செலுத்தும் நபராக இல்லை என்றும், சொன்ன வார்த்தைகளை காப்பாற்ற முடியாத நபர் என்றும் அந்த சமயத்தில் அர்ஜுன் அவர் மீது பரபரப்பாக குற்றம் சாட்டினார். அதேசமயம் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக படம் குறித்து இன்னும் சில விஷயங்களை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு நாள் தாமதமாக படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என விஸ்வக் சென் கேட்டதால் கோபமான அர்ஜுன் படத்தை நிறுத்திவிட்டார் என்று அவரது தரப்பில் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த பிரச்சனை பற்றி மனம் திறந்த விஸ்வக் சென் கூறும்போது, “எனக்கு திரை உலகில் சரியான பின்புலம் இல்லாததால் தான் என்னுடைய குரல் யாருக்கும் கேட்காமல், என் மீது தான் தவறு என்பது போன்று சித்தரிக்கப்பட்டு விட்டது. இதுவே திரையுலக பின்னணி கொண்ட ஒருவருக்கு நடந்திருக்குமா, அவரிடம் அர்ஜுன் இப்படி நடந்து கொண்டு இருப்பாரா என்றால் நிச்சயமாக இருக்காது.

இத்தனைக்கும் படத்தில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் நான் கூறவில்லை. சில விஷயங்களை முன்கூட்டியே தெளிவுபடுத்திக் கொண்டு ஒரு நாள் தாமதமாக படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று தான் கூறினேன். ஆனால் என் வீடு தேடி வந்து என் பெற்றோர்கள் முன்னிலையில் அர்ஜுன் என்னை கடுமையாக பேசிவிட்டார். ஒரு கெட்ட படத்தில் நடிப்பதை விட ஒரு கெட்ட நாளை எதிர்கொண்டு சென்று விடுவது நல்லது. இத்தனைக்கும் அந்த படத்திற்காக நான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை இருமடங்காக அர்ஜுனிடம் திருப்பி தந்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பவன் கல்யாண் படத்தை பாதியில் நிறுத்திவிட்டு அனுஷ்காவின் 50வது படத்தை இயக்கும் இயக்குனர்பவன் கல்யாண் படத்தை பாதியில் ... பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிரஞ்சீவி? பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

23 பிப், 2024 - 16:37 Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் பெங்காலிகள் ஏமாற்றுவதில் வல்லவர்கள் .....
Rate this:
Balaji - Chennai,இந்தியா
24 பிப், 2024 - 01:19Report Abuse
Balajiஏன்? தமிழனுக்கு ஏமாற்றத்தெரியாதா? எவ்வளவு தரம் தாழ்ந்து வருகிறோம் சிதனையில் என்பதற்கு உங்கள் பொத்தாம் பொதுவான கருத்தே ஒரு உதாரணம்.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in