7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

நடிகை அனுஷ்கா தெலுங்கில் 2005ல் நாகார்ஜுனா நடித்த சூப்பர் படம் மூலமும், 2006ல் தமிழில் சுந்தர் சி இயக்கிய ரெண்டு படம் மூலமும் அறிமுகமாகி திரையுலகில் கிட்டத்தட்ட 19 வருடங்களை கடந்து விட்டார். பாகுபலி படத்திற்கு பிறகு மிகப்பெரிய அளவில் புகழும் பெற்று விட்டார். இந்த நிலையில் ஐம்பதாவது படம் என்கிற மைல்களையும் தற்போது தொட்டுள்ளார் அனுஷ்கா. இதற்கு முன்னதாக அனுஷ்கா நடித்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் அனுஷ்காவிற்கு ஓரளவு வெற்றி படமாக அமைந்த நிலையில் அனுஷ்காவின் இந்த ஐம்பதாவது படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்திய படமாக உருவாக இருக்கிறது.
இந்தப் படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்குகிறார். கடந்த 2010ல் அனுஷ்காவின் திறமையான நடிப்பை வெளிக்கொண்டு வரும் விதமாக வெளியான வேதம் படத்தை தொடர்ந்து 15 வருடங்கள் கழித்து அனுஷ்காவின் ஐம்பதாவது படத்தை இயக்குவதற்காக மீண்டும் அவருடன் இணைந்துள்ளார் கிரிஷ். ஷீலாவதி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒடிசாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில் விசேஷம் என்னவென்றால் கடந்த இரண்டு வருடங்களாக பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ஹரிஹர வீர மல்லு என்கிற படத்தை கிரிஷ் இயக்கி வந்தார். சில காரணங்களால் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாமல் தள்ளித்தள்ளி போய்க்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் அந்த படத்தை அப்படியே தள்ளி வைத்துவிட்டு அனுஷ்காவின் படத்தை இயக்கத் துவங்கி விட்டார் இயக்குனர் கிரிஷ்.