ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
விஷாலின் இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். இதையடுத்து அவரது இயக்கத்தில் வெளிவந்த 'ஹீரோ' திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிதளவில் வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது. கடைசியாக பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த 'சர்தார்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சர்தார் 2ம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சர்தார் 2ம் பாகத்திற்கு பிறகு அடுத்து படத்தை இயக்குவதற்காக தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே யஷ் உடன் பி.எஸ்.மித்ரன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.