பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா 1'. அப்படம் பெரிய வரவேற்பைப் பெற்று 300 கோடிக்கும் அதிகமா வசூலித்தது. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படம் இந்த வருடம் அக்டோபர் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
74வது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக அல்லு அர்ஜுன் சென்றுள்ளார். ஒரு சர்வதேசத் திரைப்பட விழாவில் அல்லு அர்ஜுன் இப்போதுதான் கலந்து கொள்கிறார். 'புஷ்பா 1' படம் ரசிகர்களுக்காக திரையிடப்படுகிறது. அங்கு அமெரிக்க இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “புஷ்பா 3', படத்தையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். இதை 'புஷ்பா' லைன்-அப் படங்களாக உருவாக்கும் எண்ணமும் இருக்கிறது. வெளிநாட்டில் உள்ளவர்கள் இப்படத்தை எப்படி பார்க்கிறார்கள், இந்தியத் திரைப்படங்களை எப்படிப் புரிந்து கொள்கிறார்கள். திரைப்பட விழாக்கள் பற்றியும், என்ன மாதிரியான படங்களைப் பார்க்கிறார்கள், இங்கு வருபவர்களின் ரசனை எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்க இங்கு வந்துள்ளேன்.
'புஷ்பா 1' படம் தியேட்டர்களில் பார்த்தவர்களை விடவும், ஓடிடி தளத்தில் பல முறை பார்த்தவர்கள் மிக அதிகம். தியேட்டர்களில் ஓரிரு முறைதான் அப்படத்தைப் பார்த்தார்கள். ஆனால், ஓடிடி தளத்தில் பல முறை பார்த்துள்ளார்கள். இதனால், வேறு மொழிகளில், வேறு பிரதேசங்களில், வேறு நாடுகளில் பலரும் படத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. 2021ம் ஆண்டில் இந்தப் படம் இந்தியாவில் பெரிய வரவேற்பைப் பெற்றதும் இதற்கு ஒரு காரணம்.
இந்திய நகர்ப்புற ரசிகர்களும், வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் சினிமாவை ரசிக்கும் விதத்தில் பெரிய வித்தியாசமில்லை என நினைக்கிறேன்.
'புஷ்பா 1' படத்தை விடவும் 'புஷ்பா 2' படம் சர்வதேச அளவில் சென்று சேரும் அளவிற்கு மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. எனது புஷ்பா கதாபாத்திரத்திற்கும், பஹத் பாசில் நடிக்கும் பன்வர் சிங் கதாபாத்திரத்திற்கும் இடையிலான பிரச்சனைதான் இரண்டாம் பாகம்,” என்று தெரிவித்துள்ளார்.