2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதற்கு திரையுலகினர் பலரும் நிதி அளித்துள்ளனர். இடையில் நடிகர் சங்கம் தேர்தல் தொடர்பாக நடந்த பிரச்னையால் இந்த பணிகள் நின்று போகின. தற்போது மீண்டும் கட்டடத்தை கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டடத்தை முழுமையாக கட்டி முடிக்க இன்னும் பல கோடி நிதி தேவைப்படுகிறது. இதை திரட்ட பல்வேறு முயற்சிகளை நடிகர் சங்கம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி, நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார். இதை நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன், செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நடிகர் சங்கத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய உதயநிதிக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.