யஷ், பிரபாஸ் பாணியில் களமிறங்கும் சர்வானந்த் | சிபிசிஐடி அதிகாரியாக நடிக்கும் கவுதம் | மக்களின் கருத்தை அறிய அமெரிக்காவில் 'ராமாயணம்' திரையீடு | தமிழுக்கு வரும் ரியா ஷிபு | பிளாஷ்பேக்: சீரியஸ் கதையை சிரிப்பு கதையாக மாற்றிய விசு | பிளாஷ்பேக்: ஒரே ஆண்டில் 8 ஹிட் படங்கள் கொடுத்த சிவாஜி | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணப் பதிவு 36 மில்லியன் லைக்ஸ் | மார்ச் 6ல் அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் திருமணம் | காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! |

படப்பிடிப்புக்கு செல்லும் போதும், சென்னை திரும்பும் போதும் விமான நிலையத்தில் நடிகர் ரஜினி பத்திரிகை நிருபர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது அவரிடம் அரசியல் ரீதியிலும், சினிமா ரீதியிலும் கேள்விகள் கேட்கப்படும். அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு ரஜினி அளிக்கும் பதில் அவ்வப்போது பரபரப்பையும், சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்துவது உண்டு.
சில நாட்களுக்கு முன்னர், ரஜினியிடம், ‛‛நடிகர் விஜய் அரசியல் கட்சி துவக்கம்'' குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஒரே வார்த்தையில் ‛வாழ்த்துகள்' என பதிலளித்து விட்டு சென்றார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை ரஜினி சந்தித்தார். அப்போது, அவரிடம் நடிகர் விஜய், விஷால் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினி, ‛‛அரசியல் ரீதியில் தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்'' என்றார். மேலும், லால் சலாம் படம் பெரும் வெற்றி அடைந்ததாகவும், வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் கூறினார்.




