ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வால்டர் வீரைய்யா பட இயக்குனர் பாபி இயக்கத்தில் தனது 109வது படத்தில் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தில் வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிப்பதாக அறிவித்தனர். ஏற்கனவே கவுதம் மேனன், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்லோ ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, விஷாலின் சக்ரா மற்றும் மாதவனின் விக்ரம் வேதா உள்ளிட்ட தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.