வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் நாளை (ஜனவரி 25) வெளியாக உள்ள படம் மலைக்கோட்டை வாலிபன். தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் சேர்த்து பான் இந்திய படமாக இது வெளியாகிறது. பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி என்பவர் இயக்கியுள்ள இந்த படம் மல்யுத்த விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதில் மோகன்லால் மல்யுத்த வீரராக நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற நடிகர் யோகி பாபு தனது வாழ்த்துக்களை சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
யோகி பாபுவும் தற்போது மலையாளத்தில் நுழைந்து 'குருவாயூர் அம்பலநடையில்' என்கிற படத்தில் பிரித்விராஜூடன் இணைந்து நடித்து வருகிறார். மலைக்கோட்டை வாலிபன் படத்திற்கும் யோகிபாபுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் ஜெயிலர் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த அந்த நட்பின் அடிப்படையில் இந்த படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் யோகிபாபு.
மலைக்கோட்டை வாலிபன் பட போஸ்டர் அருகில் மோகன்லால் நிற்பது போன்ற புகைப்படத்தை அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டு வெளியிட்டுள்ள பதிவில் "மலைக்கோட்டை வாலிபன் ஜனவரி 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது, ஆல் தி பெஸ்ட் மோகன்லால் சார்.. வாழ்த்துக்கள் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.. இந்த அற்புதமான திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள். மலைக்கோட்டை வாலிபன் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்று குறிப்பிட்டுள்ளார் யோகிபாபு.