விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
நிசப்தம் படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. சில ஆண்டுகளாக நடிகர் ஜெய்யும் அஞ்சலியும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவர்கள் பிரேக்கப் செய்து கொண்டார்கள். பின்னர் சென்னையில் உள்ள தனது சித்தியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஆந்திராவில் குடியேறிய அஞ்சலி, அங்கு தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நேரத்தில் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் அஞ்சலி செட்டிலாகி விட்டதாகவும், படங்களில் நடிப்பதற்காக மட்டுமே அவர் இந்தியா வருவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛சினிமாவில் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் நான் நட்பு ரீதியாக பழகினாலும் கூட கிசுகிசு எழுதி வருகிறார்கள். முதலில் நடிகர் ஜெய்யை நான் காதலிப்பதாக செய்தி வெளியிட்டார்கள். அதையடுத்து இப்போது தொழிலதிபரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக எழுதுகிறார்கள். எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் ஆகிவிட்டதாக இவர்கள் எழுதுவதை பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது. சினிமா நடிகை என்பதால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று அவர்கள் இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார் அஞ்சலி.