நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! | பிப்ரவரி 2026 : வெளியான 22 படங்களில் எத்தனை வெற்றி? | கண்டிக்கும் நடிகர் மகன்; வார்னிங் கொடுத்த நடிகர் மகள் | திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சு | ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன் | போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் |

'பருத்தி வீரன்' படத்தின் பஞ்சாயத்துதான் கடந்த ஒரு வார காலமாக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தது. தான் கொடுத்த பேட்டி மூலம் சர்ச்சையை ஆரம்பித்து வைத்த தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, இன்று காலை வெளியிட்ட 'வருத்த' அறிக்கைக்குப் பிறகு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அமீரின் நண்பரும், இயக்குனரும், நடிகருமான சசிகுமார், “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன், ஞானவேல்ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன ?. 'நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுததி இருந்தால்…' என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன ?.
திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம் ?.
இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல்ராஜா சொல்ல வருவது என்ன ?.
பெயரிப்படாத அந்தக் கடிதம் யாருக்கு ?,” என சசிகுமார் சில பல கேள்விகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், இதற்கு 'கமா' போட்டு தொடர வைத்துள்ளார் சசிகுமார்.