தமிழில் வெளியாகும் 'டபுள் ஐ-ஸ்மார்ட்' | பின்னணி பாடகர் வேல்முருகன் கைது | சின்னத்திரை : நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் மரணம் | புத்தகத்திற்கு பைபிள் பெயர் : கரீனா கபூருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் | இந்த ஆண்டில் கமல்ஹாசனின் 3 படங்கள் ரிலீஸ் | அன்னையர் தினத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ | 'மைதான்' படம் தோல்வி : தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம் | என்கிட்ட மோதாதே... நான் ராஜாதி ராஜனடா...! | உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எலக்சன்' | நடிகை நவ்யா நாயரின் சென்னை நினைவுகள் |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை தானும் ஒரு ஹீரோ என்கிற அளவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து படங்களில் நடித்து வந்தார் எஸ்ஜே சூர்யா. ஆனால் மாநாடு படத்தில் வில்லனாக அவர் நடித்ததை தொடர்ந்து ரசிகர்களிடம் அவருக்கான வரவேற்பு பலமடங்கு உயர்ந்தது. தொடர்ந்து டான், மார்க் ஆண்டனி சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என தான் நடிக்கும் படங்களில் எல்லாம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.
தமிழை தாண்டி ஏற்கனவே தெலுங்கில் நுழைந்து படங்களில் நடித்து வரும் எஸ்ஜே சூர்யா தற்போது முதன்முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார். மலையாளத்தில் சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகி வரும் அவரது 251வது படத்தில் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஜீபூம்பா என்கிற படத்தை இயக்கிய ராகுல் ராமச்சந்திரன் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.