டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை தானும் ஒரு ஹீரோ என்கிற அளவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து படங்களில் நடித்து வந்தார் எஸ்ஜே சூர்யா. ஆனால் மாநாடு படத்தில் வில்லனாக அவர் நடித்ததை தொடர்ந்து ரசிகர்களிடம் அவருக்கான வரவேற்பு பலமடங்கு உயர்ந்தது. தொடர்ந்து டான், மார்க் ஆண்டனி சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என தான் நடிக்கும் படங்களில் எல்லாம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.
தமிழை தாண்டி ஏற்கனவே தெலுங்கில் நுழைந்து படங்களில் நடித்து வரும் எஸ்ஜே சூர்யா தற்போது முதன்முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார். மலையாளத்தில் சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகி வரும் அவரது 251வது படத்தில் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஜீபூம்பா என்கிற படத்தை இயக்கிய ராகுல் ராமச்சந்திரன் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.




