அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தர்பார் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் கடந்த சில வருடங்களாகவே சரியான பட வாய்ப்பு இன்றி தவித்து வந்தார். அவரது ஆதர்ச நடிகரான விஜய் கூட அவருக்கு ஆதரவு தராத நிலையில் அவரால் ஆரம்ப கட்டத்தில் வளர்க்கப்பட்ட சிவகார்த்திகேயன், அவரது டைரக்சனில் நடிக்க முன்வந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏற்கனவே வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தை பான் இந்தியா படமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஏ.ஆர் முருகதாஸ் இதற்காக ஒவ்வொரு மொழியிலிருந்தும் பிரபல நடிகர்களை அழைத்து நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
அந்த வகையில் நடிகர் மோகன்லால், துப்பாக்கி பட வில்லன் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாம். இது குறித்த தகவல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.