ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
தர்பார் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் கடந்த சில வருடங்களாகவே சரியான பட வாய்ப்பு இன்றி தவித்து வந்தார். அவரது ஆதர்ச நடிகரான விஜய் கூட அவருக்கு ஆதரவு தராத நிலையில் அவரால் ஆரம்ப கட்டத்தில் வளர்க்கப்பட்ட சிவகார்த்திகேயன், அவரது டைரக்சனில் நடிக்க முன்வந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏற்கனவே வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தை பான் இந்தியா படமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஏ.ஆர் முருகதாஸ் இதற்காக ஒவ்வொரு மொழியிலிருந்தும் பிரபல நடிகர்களை அழைத்து நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
அந்த வகையில் நடிகர் மோகன்லால், துப்பாக்கி பட வில்லன் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாம். இது குறித்த தகவல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.