Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்றைய நடிகவேள்: எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரஜினி சூட்டிய பட்டம்

15 நவ, 2023 - 12:00 IST
எழுத்தின் அளவு:
Actor-of-the-day:-Rajinikanth-for-SJ-Suriya

கார்த்திக் சுப்பராஜ் இயக்கி ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் தீபாவளியையொட்டி வெளிவந்தது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும் தீபாவளி படங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தை தனது வீட்டில் உள்ள ஹோம் தியேட்டரில் பார்த்து ரசித்த ரஜினி, படக் குழுவினரை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் எழுதியிருப்பதாவது: 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்பராஜின் அற்புதமான படைப்பு. வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரை பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்சால் இப்படியும் நடிக்க முடியுமா? என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார்.

திருவின் கேமரா விளையாடியிருக்கிறது. கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டுக்குரியது. திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் அபாரம். சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசையமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்துக்கு உயிரூட்டி, தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார். இந்த படத்தை இவ்வளவு பிரமாண்டமாக எடுத்து இருக்கும் தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுக்கள்.

படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு யானைகளும் நடித்து இருக்கின்றன. செட்டாணியாக நடித்து இருக்கும் விது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும், அற்புதம். இந்த படத்தில் கார்த்திக் சுப்பராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார். பிரமிக்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார், அழவும் வைக்கிறார். நான் பெருமைப்படுகிறேன். எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குலதெய்வ கோயிலுக்கு சென்ற புகழ்!: வைரலாகும் புகைப்படம்குலதெய்வ கோயிலுக்கு சென்ற புகழ்!: ... தாத்தாவின் பாடலை சிதைத்து விட்டார்: ஏ.ஆர்.ரஹ்மான் மீது வங்க கவிஞர் பேரன் குற்றச்சாட்டு தாத்தாவின் பாடலை சிதைத்து விட்டார்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)