அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து | விஜயகாந்த் நினைவிடத்தில் பாலா நெகிழ்ச்சி செயல்! | கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய ப்ரியங்கா நல்காரி | இவ்வளவு வைரலாகும் என நினைக்கவேயில்லை : தர்ஷனா | டீச்சராக மாறி வகுப்பெடுக்கும் கேப்ரில்லா செல்லஸ் |
ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, அழகன் அழகி, வண்ணஜிகினா, ஆனந்தம் விளையாடும் வீடு படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி தற்போது இயக்கி வரும் படம் 'திரு.மாணிக்கம்'. இதில் கதை நாயகனாக சமுத்திரகனி நடிக்கிறார். நாடோடிகள் படத்தில் அவர் அறிமுகபடுத்திய அனன்யா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.
படம் பற்றிய இயக்குனர் நந்தா பெரியசாமி கூறியதாவது: ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா, அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்ற கேள்விகளோடு இந்தப் படம் தொடங்குகிறது. கதையின் நாயகன் மாணிக்கத்தை நேர்மையாக இருக்க விடாமல் சொந்த பந்தங்களே தடுக்கிறது. கூடவே அராஜகம் பிடித்த போலீஸ்காரர்களும், இவர்கள் எல்லோரையும் தாண்டி மாணிக்கத்தின் மனசாட்சியும் அவனைத் துரத்துகிறது. இந்தப் போராட்டத்திலிருந்து மாணிக்கம் எப்படித் தப்பித்து நேர்மையான ஒரு காரியத்தைச் செய்கிறார் என்பதுதான் படத்தின் சாராம்சம். என்றார்.