'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய தங்கர் பச்சான், தனது மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் விதமாக 'டக்கு முக்கு டிக்கு தாளம்' என்கிற படத்தை இயக்கினார். சில காரணங்களால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. அதேசமயம் அவரது மகன் அடுத்ததாக இயக்குனர் சிவப்பிரகாஷ் என்பவர் இயக்கியுள்ள 'பேரன்பும் பெருங்கோபமும்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் தான் இவரது முதல் படமாக வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் எஸ்.ஏ சந்திரசேகர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “தங்கர் பச்சானின் படங்களை திரைப்படங்களாக இல்லாமல் காவியங்களாக தான் நாம் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்டவர் தன் பையனை அறிமுகப்படுத்த நினைக்கும் போது அவரை நிறைய செதுக்க வேண்டும்... அந்த பொறுப்பை இன்னொரு இளைஞரிடம் ஒப்படைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல... நான் கூட அதைத்தான் நினைத்தேன்.. ஆனால் நடக்கவில்லை.
90களில் நான் பிஸியாக இருந்தபோது என் மகன் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட சமயத்தில் நாமே டைரக்ட் செய்தால் நன்றாக இருக்காது என நினைத்து விஜய்யின் ஆல்பத்தை வைத்துக்கொண்டு எத்தனையோ இயக்குனர்களிடம் போய் நின்றேன். ஒருவரும் முன்வரவில்லை. அதனால் வேறு வழியின்றி நானே அந்த படத்தை இயக்கினேன்.. ஆனால் இளைஞனான தன் மகன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் போய் நன்கு ஒட்டிக்கொள்ள வேண்டும் என்றால் அவரை இன்னொரு இளைஞன் தன் படத்தை இயக்கினால் தான் சரியாக இருக்கும் என நினைத்து தங்கர் பச்சான் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்துள்ளார்” என்று கூறினார்.