'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி | தியேட்டர் சங்கத்திற்கு தெலுங்கு தயாரிப்பாளர்கள் பதிலடி | ஆவலுடன் எதிர்பார்த்த 'துரந்தர் தி ரிவெஞ்ச்': இந்த வார ஓடிடி வெளியீடுகள் | தத்தெடுத்த பூனைக்கு குடும்பப் பெயரைச் சூட்டிய ஸ்ருதிஹாசன் | முருக பக்தி பாடலை வெளியிட்ட இரண்டு முருகன் பெயர் கொண்டவர்கள் | 'கருப்பு' வரான், வழி மறிக்காதீங்க...: ஆர்ஜே பாலாஜி கண்ணீருடன் வீடியோ |

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குவா. ரூபாய் 350 கோடி பட்ஜெட்டில் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வந்த நிலையில், அதன் பிறகு ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் நடைபெற்று வந்தது. அங்கு சூர்யா பாலிவுட் நடிகர் பாபி தியோல் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வந்த கங்குவா படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இதையடுத்து படக் குழுவினர் அனைவரும் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பாங்காங்கில் நடைபெற இருப்பதாகவும் படக்குழு ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.