அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஏன் அந்த இலாகா? நடிகர் விஷால் கேள்வி | பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? | நடிகையை பிளாக்மெயில் செய்த பாய் பிரண்ட் | பிளாஷ்பேக்: பாடல் பதிவிற்குப் பின் நடனக் காட்சியை படமாக்கும் முறையை அறிமுகப்படுத்திய “அசோக்குமார்” | இளம் பெண் அமைச்சரை வாழ்த்திய நடிகை ரேவதி | முன்னாள் முதல்வரை சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜ் | விஜய் முதல்வர் ஆனதால் பொறாமையா? அதிமுக-திமுக கூட்டணிக்கு முயன்றேனா? : ரஜினிகாந்த் விளக்கம் | 'கருப்பு' வெற்றி: ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் நன்றி சொன்ன சூர்யா |

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கைத் துவக்கினார். தற்போது 20 லட்சம் பாலோயர்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா, சில பிரபலங்களை மட்டுமே அவரது கணக்கில் பின் தொடர்கிறார்.
அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன், மலையாள நடிகைகளான அபர்ணா பாலமுரளி, பார்வதி, தமிழ் நடிகையான சமந்தா, நிஹரிகா, பாலிவுட் நடிகைகளான கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோனே, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லோபஸ், ஹிந்தி நடிகர் ஷாரூக்கான், இசையமைப்பாளர் அனிருத், பிரபல பெண் யூடியூபர் நிஹரிகா, அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா உள்ளிட்ட 20 பேரை மட்டுமே பின் தொடர்கிறார்.
மேலும், இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கிய பிறகு 'ஜவான்' படத்தைப் பற்றிய பதிவுகளை மட்டுமே பதிவிட்டுள்ளார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள 'இறைவன்' படத்தின் அப்டேட்டுகளைக் கூடப் பதிவிடவில்லை. சீக்கிரத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ள தமிழ் நடிகை என்ற சாதனையை நயன்தாரா பெறவும் வாய்ப்புகள் உண்டு.