சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கைத் துவக்கினார். தற்போது 20 லட்சம் பாலோயர்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா, சில பிரபலங்களை மட்டுமே அவரது கணக்கில் பின் தொடர்கிறார்.
அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன், மலையாள நடிகைகளான அபர்ணா பாலமுரளி, பார்வதி, தமிழ் நடிகையான சமந்தா, நிஹரிகா, பாலிவுட் நடிகைகளான கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோனே, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லோபஸ், ஹிந்தி நடிகர் ஷாரூக்கான், இசையமைப்பாளர் அனிருத், பிரபல பெண் யூடியூபர் நிஹரிகா, அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா உள்ளிட்ட 20 பேரை மட்டுமே பின் தொடர்கிறார்.
மேலும், இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கிய பிறகு 'ஜவான்' படத்தைப் பற்றிய பதிவுகளை மட்டுமே பதிவிட்டுள்ளார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள 'இறைவன்' படத்தின் அப்டேட்டுகளைக் கூடப் பதிவிடவில்லை. சீக்கிரத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ள தமிழ் நடிகை என்ற சாதனையை நயன்தாரா பெறவும் வாய்ப்புகள் உண்டு.