‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் கடந்த 2013ம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் மதயானை கூட்டம் என்ற படத்தை தயாரித்தார். கதிர் - ஓவியா நடித்த இந்தப்படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி 15 கோடி ரூபாய் வசூல் செய்தது. என்றாலும் அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக எந்த படத்தையும் தயாரிக்காத ஜி.வி.பிரகாஷ், தற்போது தனது 25வது படத்தை தானே தயாரித்து நடிக்கப் போகிறார். ‛கிங்ஸ்டன்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்- நடிகைகள் சம்பந்தப்பட்ட தகவல் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.