சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… | ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு | விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா | தென்னிந்தியப் படங்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன : பவன் கல்யாண் | 'ஹிட் 3' மீது கதை திருட்டு வழக்கு | விஜய் மல்லையாவை பார்த்து குடிப்பதை நிறுத்தினேன்: ராஜு முருகன் சொல்கிறார் | விஜயதேவரகொண்டா மீது வன்கொடுமை வழக்கு பதிவு | பிளாஷ்பேக்: கங்கை அமரனை நம்பி ஏமாந்த ஏவிஎம் | பிளாஷ்பேக்: அண்ணி உறவை பேசிய முதல் படம் |
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் கடந்த 2013ம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் மதயானை கூட்டம் என்ற படத்தை தயாரித்தார். கதிர் - ஓவியா நடித்த இந்தப்படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி 15 கோடி ரூபாய் வசூல் செய்தது. என்றாலும் அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக எந்த படத்தையும் தயாரிக்காத ஜி.வி.பிரகாஷ், தற்போது தனது 25வது படத்தை தானே தயாரித்து நடிக்கப் போகிறார். ‛கிங்ஸ்டன்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்- நடிகைகள் சம்பந்தப்பட்ட தகவல் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.