டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நேஷனல் கிரஷ் என பட்டம் கொடுத்து அனைவரும் அழைப்பதாலோ என்னவோ நடிகை ராஷ்மிகா தற்போது தெலுங்கு, தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட பாலிவுட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே அவர் நடித்த குட்பை மற்றும் மிஷன் மஞ்சு ஆகிய படங்கள் ஹிந்தியில் வரவேற்பை பெற தவறிய நிலையில் தற்போது ரன்வீர் கபூருடன் இணைந்து நடித்துள்ள அனிமல் என்கிற திரைப்படத்தை தான் ரொம்பவும் எதிர்பார்த்து இருக்கிறார். அதுமட்டுமல்ல ஹிந்தியிலேயே தொடர்ந்து காலுன்றும் விதமாக ஷாகித் கபூருடன் அடுத்ததாக நடிக்கும் வாய்ப்பு தேடி வர அதனை ஒப்புக் கொண்டார்.
இதற்காக தெலுங்கில் நிதின் ஜோடியாக வெங்கி குடுமுலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேடிவந்த வாய்ப்பை கால்சீட் காரணம் காட்டி ஒதுக்கினார் ராஷ்மிகா. ஆனால் தற்போது ஷாகித் கபூர் படம் பட்ஜெட் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக ராஷ்மிகாவுக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இன்னும் நிதின் படத்திற்கு வேறு கதாநாயகி தேர்வு செய்யப்படவில்லை என்பதால் ராஷ்மிகாவே அந்த படத்தை ஒப்புக் கொள்வாரா, இல்லை அந்த படத்திற்கு வேறு கதாநாயகி தேர்வு செய்யப்படுவாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.




