Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து | விஜயகாந்த் நினைவிடத்தில் பாலா நெகிழ்ச்சி செயல்! | கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய ப்ரியங்கா நல்காரி | இவ்வளவு வைரலாகும் என நினைக்கவேயில்லை : தர்ஷனா | டீச்சராக மாறி வகுப்பெடுக்கும் கேப்ரில்லா செல்லஸ் | திடீர் இயக்குனரான ஜோதி கிருஷ்ணா | ஒரு நொடி இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் | 22 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கிய கே.ரங்கராஜ் | கொளுத்தும் வெயிலில் காத்திருந்த சிறுவர்கள் ஏமாற்றம் : மன்னிப்பு கேட்ட பிரபுதேவா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கைமாறிய ஹிரண்ய கசிபு படம் : ராணா மீது கோபத்தில் குணசேகர்

21 ஜூலை, 2023 - 01:54 IST
எழுத்தின் அளவு:
Hiranya-Kasibu-film-:-Gunasekar-angry-with-Rana

தெலுங்கில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒக்கடு, சைனிக்கூடு என மகேஷ்பாபுவை வைத்து கமர்ஷியல் படங்களை இயக்கி வந்தவர் இயக்குனர் குணசேகர். சமீபகாலமாக அவரது கவனம் புராண மற்றும் வரலாற்று படங்கள் பக்கம் திரும்பியது. கடந்த 2015ல் அனுஷ்கா கதாநாயகியாக நடித்த ருத்ரமாதேவி என்கிற படத்தை இயக்கினார். பாகுபலி வில்லனான ராணாவை இந்த படத்தில் கதாநாயகனாக மாற்றினார். அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதைத் தொடர்ந்து சமீபத்தில் அவரது இயக்கத்தில் புராண கதையான சாகுந்தலம் என்கிற படம் வெளியானது. அந்த படமும் அவருக்கு தோல்வியையே பரிசளித்தது.

மீண்டும் சமூக, கமர்சியல் படங்களின் பக்கம் இயக்குனர் குணசேகர் கவனத்தை திருப்புவார் என பார்த்தால் மீண்டும் ஹிரண்ய கசிபுவின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி புராண படம் இயக்கும் திட்டத்தில் இருக்கிறார் குணசேகர்.. இதற்காக கிட்டத்தட்ட நாலு வருடங்கள் முன்கட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார் குணசேகர். இதிலும் கதாநாயகனாக ராணா நடிப்பதாகத்தான் இருந்தது. பலமுறை இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு பின் அப்படியே கிடப்பில் போடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் ராணா இதே ஹிரண்ய கசிபு கதையில் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இது குணசேகருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இதை தொடர்ந்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் குணசேகர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் கதையை கடவுளை வைத்து உருவாக்கும்போது, கடவுள் உங்களுடைய நேர்மையின் மீதும் ஒரு கண் வைத்து இருக்கிறார் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.. நெறிமுறைக்கு மாறான செயல்கள் நெறிமுறையால் பதிலளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

இது நடிகர் ராணாவின் மீதான அவரது கோபத்தின் வெளிப்பாடுதான் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துல்கர் சல்மான் வீடியோ ஆல்பம் ஜூலை 25ல் வெளியீடுதுல்கர் சல்மான் வீடியோ ஆல்பம் ஜூலை ... கமல்ஹாசனை புகழ்ந்த அமிதாப்பச்சன் கமல்ஹாசனை புகழ்ந்த அமிதாப்பச்சன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in