மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மலையாளத்தில் மின்னல் முரளி என்கிற படத்தில் இயக்குனராகவும் ‛ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' என்கிற படத்தின் நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் இயக்குனர் பஷில் ஜோசப். இவர் முதன்முதலாக இயக்கிய நகைச்சுவை திரைப்படம் குஞ்சி ராமாயணம். இந்த படத்திற்கு கதை எழுதியவர் கதாசிரியர் தீபு பிரதீப். இந்த நிலையில் தீபு பிரதீப் கதையில் தற்போது உருவாகியுள்ள படம் பத்மினி. இந்தப் படத்தில் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்க அபர்ணா பாலமுரளி மற்றும் மடோனா செபாஸ்டியன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குனர் சென்னா ஹெக்டே என்பவர் இயக்கியுள்ளார். குஞ்சி ராமாயணம் படம் போல இதுவும் இன்னொரு கதைக்களத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சத்துடன் உருவாகியுள்ளதாம். இந்த படம் வரும் ஜூலை 7ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது கேரளாவில் கனமழை பெய்து வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை படத்தின் நாயகியான அபர்ணா பாலமுரளி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.