பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
காமெடியனாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரேம்ஜி அமரன். அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் படம் அனைத்திலும் அவர் நடித்துள்ளார். :மாங்கா' என்ற படத்தில் கதை நாயகனாக நடித்திருந்தார். தற்போது அவர் மீண்டும் கதை நாயகனாக நடித்துள்ள படம் 'சத்திய சோதனை'. இந்த படத்தை' ஒரு கிடாயின் கருணை மனு' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் சங்கையா இயக்கி உள்ளார். ஸ்வயம் சித்தா, ரேஷ்மா, கு.ஞானசம்பந்தம், 'சித்தன்' மோகன் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் வருகிற 14ம்தேதி வெளியாகிறது.
படம் பற்றி சுரேஷ் சங்கய்யா கூறியதாவது: இது அருப்புக்கோட்டை பின்னணியில் நடக்கும் கதை. சிறு நகரங்களில் காவல் நிலையம், நீதிமன்றம் எப்படி இயங்குகிறது என்பதை இந்தப் படம் சொல்லும். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை படங்களில் பார்த்த பிரேம்ஜி இதில் தெரியமாட்டார். அவர் ஸ்டைலும் இருக்காது. வித்தியாசமான பிரேம்ஜியை இதில் பார்க்கலாம். பார்வையாளர்கள் கதையோடு தங்களைத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். என்றார்.