மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி பல ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார். 45 வயதான பிரேம்ஜிக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்விக்கு விடைத்தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் பிரேம்ஜிக்கு சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பதாக திருமண பத்திரிக்கை ஒன்று சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியானது.
இதனையடுத்து ஒருவழியாக பிரேம்ஜிக்கு திருமணம் முடிவானதை ரசிகர்களும் வரவேற்றனர். பிரேம்ஜியின் சகோதரரும் இயக்குனருமான வெங்கட்பிரபு அதனை உறுதிப்படுத்தினார். இவர்களுக்கு நேற்றிரவு நிச்சயதார்த்தம் முடிந்து, இன்று (ஜூன் 9) திருத்தணி முருகன் கோவிலில் தனி மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. வெங்கட்பிரபு தாலி எடுத்துக்கொடுக்க பிரேம்ஜி, மணப்பெண் இந்துவுக்கு தாலி கட்டினார். மகிழ்ச்சியில் மணப்பெண் இந்துவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார் பிரேம்ஜி. இந்த வீடியோ வைரலானது.
திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர் ஜெய், வைபவ், பாடகர் கிருஷ், அவரது மனைவியும் நடிகையுமான சங்கீதா போன்றவர் கலந்துக் கொண்டனர். கங்கை அமரனின் அண்ணன் இளையராஜா, அவரது மகன் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. இம்மாதம் இறுதியில் சென்னை தாஜ் ஓட்டலில் வரவேற்பு நடைபெற உள்ளது. இந்த ஜோடிக்கு திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.