‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் மனோகரன் மற்றும் கண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படம் 'சைத்ரா'. இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஜெனித்குமார் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: 24 மணி நேரத்தில் நடக்கும் கதை இது. இதில் யாஷிகா ஆனந்த் பேயாக நடித்துள்ளார். அவர் சோலோ ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இது. பேய் படம் என்றாலும் வழக்கமான காட்சிகள் இன்றி புதுமையான முறையில் இதனை படமாக்கி உள்ளதோடு. ஒரு முக்கியமான விஷயம் பற்றியும் படம் பேசுகிறது. பேய் இருக்கிறதா? இல்லையா என்ற விவாவத்தையும் முன் வைக்கிறது. என்றார்.