ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்களை தொடர்ந்து அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்தனர். இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி செய்யப்பட்டு அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் இப்படத்தை விட்டு வெளியேறினார். இப்போது சுந்தர். சி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
அரண்மனை 4ம் பாகத்தில் நடிகைகள் தமன்னா மற்றும் ராஷி கண்ணா என இருவரும் கதாநாயகியாக நடிக்கின்றனர். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா ஆகியோரின் காட்சிகள் இன்று படமாக்கப்பட்டு வருகின்றது.