செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களில் எத்தனையோ கதாநாயகிகள் அறிமுகமாகி பின் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய் இருக்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட 18 வருடங்களாக தமிழிலும் மலையாளத்திலும் தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை ரம்யா நம்பீசன். குறிப்பாக விஜய் சேதுபதியுடன் நடித்த பீட்சா, சேதுபதி ஆகிய படங்கள் இவருக்கு ரசிகர்களிடம் இன்னும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன.
அதேசமயம் மலையாளத்தில் பிஸியாக நடித்து வந்த இவர் கடந்த 2017ல் நடந்த நடிகை கடத்தல் நிகழ்வு சம்பவத்திற்கு பிறகு அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்ததாலும் மலையாள திரை உலகில் சில நடிகைகளால் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் நல அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு பாலியல் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்ததாலும் மலையாள திரை உலகில் இருந்து மறைமுகமாக ஓரம் கட்டப்பட்டார்.
ஆனாலும் அது பற்றி கவலைப்படாமல் மலையாளத்திலிருந்து தேடி வரும் வாய்ப்புகளை மட்டும் ஏற்று நடித்து வரும் ரம்யா நம்பீசன் தமிழில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் இவரது தோழி நடிகை மஞ்சு வாரியரின் சொந்த தயாரிப்பில் நடித்திருந்த 'லலிதம் சுந்தரம்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா நம்பீசன்.
இந்த நிலையில் மலையாளத்தில் கேரள திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள 'பி 32 முதல் 44 வரை' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ரம்யா நம்பீசன். வெவ்வேறு பகுதிகளில் இருந்து நகரத்திற்கு வந்து ஒரு விடுதியில் ஒன்றாக தங்கி இருக்கும் பெண்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. வரும் ஏப்ரல் ஏழாம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. அதேபோல தமிழில் விஜய் ஆண்டனியுடன் இவர் ஜோடியாக நடித்துள்ள தமிழரசன் திரைப்படமும் மிக நீண்ட காத்திருப்புக்கு பிறகு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் மகிழ்ச்சியில் இருப்பதாக தனது பேட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறார் ரம்யா நம்பீசன்.