ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருக்கிறார். அதோடு விஜய்யின் லியோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து தனது அடுத்த படத்தின் கதையை முடிவு செய்துள்ளாராம். இந்த கதை இரண்டு கதாநாயகர்கள் கொண்ட கதை என்பதால் இதில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அபிஷேக் பச்சன் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடக்கிறது.
இப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால் இதனை ஒரு பான் இந்திய படமாக்க திட்டமிட்டு உள்ளார் கவுதம் மேனன். இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் சுமாரான வெற்றியை பெற்றது. அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி, அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் நடித்த எந்த படமும் சமீபத்தில் வெற்றி பெறவில்லை . தொடர் தோல்விகளை கொடுத்த இவர்கள் தோல்வியில் இருந்து மீண்டு கூட்டணியாக ஒரு நல்ல வெற்றி திரைப்படம் தருவார்களா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பி வருகிறது.