சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளியான அபிநயா தமிழில் நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமாகி புகழ்பெற்றார். அதன்பிறகு ஆயிரத்தில் ஒருவன், ஈசன், 7ம் அறிவு, வீரம், தனியொருவன், குற்றம் 23, விழித்திரு உள்பட பல படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் அவர் முதன் முறையாக 'குற்றம் புரிந்தால்' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தை நான் சிவனாகிறேன், இரும்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கிய டிஸ்னி இயக்குகிறார். ஆதிக் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். பெங்களூர்வைச் சேர்ந்த அர்ச்சனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கே.கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார், கே.எஸ்.மனோஜ் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் டிஸ்னி கூறியதாவது: மர்ம நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு, மன உளைச்சலால் விரக்தி அடைந்த ஒருவன், தன் கைகளில் சட்டத்தை எடுக்கிறான். அவன் கொலையாளிகளை மட்டுமல்லாமல் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறி வைக்கிறான். அவன் தண்டித்தானா, இல்லையா என்பதை காதல், செண்டிமென்ட், ஆக்ஷன் கலந்து, சமூக அக்கறையுடன் இப்படத்தை இயக்கியுள்ளேன். பழிவாங்கத் துடிக்கும் ஹீரோவை விரட்டும் போலீஸ் அதிகாரியாக அபிநயா நடிக்கிறார், என்கிறார்.