பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனகூடு திருவிழா நடக்கும். இதில் இந்தியா முழுக்க உள்ள இஸ்லாமியர்கள் கலந்து கொள்வார்கள். 466ம் ஆண்டு சந்தனகூடு திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஸ்தூபி இசையுடன் கோலாட்டம், பறையாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு வைபவம் நடந்தது.
சந்தனகூடு விழாவில் கலந்து கொள்ள வந்த ஏ.ஆர்.ரஹ்மான் காரில் நாகூர் சென்றார். மக்கள் கூட்டம், போக்குவரத்து நெரிசல் காரணமாக அவரால் தர்காவுக்கு செல்ல முடியவில்லை. அதனால் ஒரு ஆட்டோவில் ஏறி தர்காவுக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து மற்றொரு ஆட்டோவில் அவரது பாதுகாவலர்களும், போலீசாரும் சென்றனர்.
தர்காவுக்கு ஆட்டோவில் வந்து இறங்கிய ரஹ்மானை பார்த்து பொதுமக்கள் ஆச்சர்யமடைந்தனர். கூட்டம் கூடுவதற்குள் அவரை தர்காவுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு நடந்த சந்தனம் பூசும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் வழிபாடு செய்து விட்டு திரும்பினார்.