ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் 'பாய்ஸ்' படம் மூலம் நடிகரான அறிமுகமானவர் தமன். அதன் பிறகு நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டாமல் இசையமைப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினார். அவர்களது குடும்பமே திரையிசைக் குடும்பம் என்பதே அதற்குக் காரணம். தமிழில் 2008ம் ஆண்டில் வெளிவந்த 'சிந்தனை செய்' படம் மூலமும், தெலுங்கில் 'மல்லி மல்லி' படம் மூலமும் இசையமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கினார் தமன்.
அதன் பிறகு தமிழில் 'ஈரம், காஞ்சனா, ஒஸ்தி, காதலில் சொதப்புவது எப்படி, தடையறத் தாக்க, சேட்டை, வாலு, தில்லுக்கு துட்டு, ஸ்கெட்ச், மகா முனி, ஈஸ்வரன்,” உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் 'அலா வைகுந்தபுரம்லோ' படத்திற்குப் பிறகு மிகவும் பிஸியான இசையமைப்பாளராக மாறினார்.
இந்தாண்டு பொங்கலுக்கு தமன் இசையமைத்துள்ள இரண்டு படங்கள் வெளிவர உள்ளன. தமிழில் விஜய் நடிக்கும் 'வாரிசு', தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் 'வீர சிம்ஹா ரெட்டி' ஆகிய இரண்டு முக்கியமான படங்கள் வருகின்றன. இரண்டு படங்களுமே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இரண்டு படங்களின் பின்னணி இசை வேலைகளில் பரபரப்பாக உள்ளார் தமன்.
இதற்கடுத்து தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படம், மகேஷ்பாபுவின் 28வது படம் ஆகியவை அவரது இசையில் இந்த வருடத்தின் முக்கிய படங்கள். 'வாரிசு' படத்திற்குப் பிறகு தமிழிலும் அவர் முன்னணிக்கு வருவார் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.