சினிமா விழாக்களில் அரசியல்வாதிகள் : கோலிவுட்டில் புது டிரெண்ட் | பிளாஷ்பேக்: சென்னை மாகாணத்தை முதன் முதலில் 'தமிழ்நாடு' என்று அழைத்தது சினிமா | தீவிர முருக பக்தர் யோகிபாபு | பிளாஷ்பேக் : அநேக புதுமைகள் படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” | முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா! | ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் குஷி, சிவகாசி | 'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி |
பாலிவுட் நடிகை சன்னி லியோன் இதற்கு முன்பு வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் நடித்துள்ள முதல் படம் 'ஓ மை கோஸ்ட்'. இந்த படத்தில் அவருடன் தர்ஷா குப்தா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் இயக்கி உள்ளார். படம் நாளை வெளிவருகிறது.
படத்தின் புரமோசன் பணிகளுக்காக சென்னை வந்துள்ள சன்னி லியோன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: இந்த ஆண்டு நான் தென்னிந்திய மொழி படங்களில் தான் அதிகமாக நடித்திருக்கிறேன். கொரோனா காலத்திற்கு பிறகு சினிமா கண்டென்டுகளை நோக்கி செல்கிறது. அதனால் நடிகர்களுக்கு விதவிதமான கேரக்டர்கள் கிடைக்கிறது. நான் இந்த படத்தில் இளவரசியாகவும், பேயாகவும் நடித்திருக்கிறேன். வெயிட்டான வாளை கையில் தூக்கி கொண்டும் பல கிலோ எடையுள்ள உடைகளை அணிந்து கொண்டும் நடிக்க சிரமமாக இருந்தது.
பேயாக நடிப்பதில் சிரமம் இல்லை. மேக் அப் மேனுக்குத்தான் சிரமம் இருந்திருக்கும். பேய் இருக்கா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு பேய் பயம் இல்லை. பேய் ஏன் மனிதனுக்கு தீமை செய்ய வேண்டும் என்கிற கேள்வி எனக்குள் உண்டு. ஐ லவ் கோஸ்ட்.
நெகட்டிவ் விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அவற்றை நான் எடுத்துக் கொள்வதே இல்லை. புறம் தள்ளி விடுகிறேன். பாசிட்டவான விஷயங்கள் நிறைய இருக்கும்போது எதற்கு நெகட்டிவ் கமெண்டுகளில் கவனம் செலுத்த வேண்டும். அவற்றை நான் படிப்பதில்லை. என்னை சுற்றி இருப்பவர்கள் பாசிட்டிவ்களை மட்டுமே என் கவனத்திற்கு கொண்டு வருவார்கள்.
என்னை பற்றி அறியாதவர்கள், எனது அன்றாட பணி பற்றி தெரியாதவர்கள் என்னை பற்றி நெகட்டிவ் விமர்சனங்களை முன் வைக்கும்போது அவற்றை நான் ஏன் கவனிக்க வேண்டும். முகம் தெரியாத அந்த நபர்களின் கமெண்டுகள் பற்றி எனக்கு கவலை இல்லை.
இவ்வாறு சன்னி லியோன் கூறினார்.