பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கவுதம் மேனன் - சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி உள்ள படம் ‛வெந்து தணிந்தது காடு'. சித்தி இட்னானி நாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ராதிகா நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை(செப்., 15) ரிலீஸாக உள்ளது.
இந்த படத்திற்கு தடை கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை, ஐகோர்ட் வழக்கு தொடரப்பட்டது. அதில் சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் படம் இயக்க கவுதம் மேனன் ரூ.2.40 கோடி முன்பணம் பெற்று ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அதே கதையை வைத்து "வெந்து தணிந்தது காடு" படம் எடுக்கப்பட்டு வெளியாக உள்ளது. தங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் படத்தை வெளியிட கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வக்கீல் சம்பந்தப்பட்ட பட நிறுவனத்துடன் சமரசம் செய்து கொள்கிறோம் என தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி, உத்திரவாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய கவுதம் மேனன் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்.21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதனால் நாளை வெந்து தணிந்தது காடு படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என்ற சூழல் உருவாகி உள்ளது. அதனால் திட்டமிட்டப்படி படம் நாளை வெளியாகிறது.