இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் கடந்த ஞாயிறு அன்று நடந்து முடிந்தது. இதில் பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியினரும், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான மற்றொரு அணியினரும் களமிறங்கினர்.
இதில் தலைவராக இயக்குனர் பாக்யராஜ் வெற்றி பெற்றார். செயலாளராக பாக்யராஜ் அணியின் லியாகத் அலிகான், பொருளாளராக பாலசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். துணைத்தலைவர்களாக எஸ்ஏசியின் ரவி மரியாவும், பாக்யராஜ் அணியின் யார் கண்ணனும் வெற்றி பெற்றனர். இணைச் செயலாளர்களுக்கான 4 பேர்களில் எஸ்ஏசியின் சி.ரங்கநாதன், வி்.பிரபாகரும், பாக்யராஜ் அணியைச் சேர்ந்த மங்கை ஹரிராஜன், கவிஞர் முத்துலிங்கமும் வெற்றி பெற்றனர்.
செயற்குழு உறுப்பினர் 12 பேர்களில் எஸ்ஏசி அணியின் பேரரசு, சரண், விவேகா, சிங்கம்புலி, ஏ.வெங்கடேஷ், சாய்ரமணி மற்றும் ராதாரவி ஆகியோர் வெற்றி பெற்றனர். பாக்யராஜ் அணியின் பாலாஜி சக்திவேல், பட்டுக்கோட்டை பிரபாகர், அஜயன் பாலா, ஹேமமாலினி மற்றும் ராஜா கார்த்திக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக இயங்குனர் கே.பாக்யராஜ் பதவியேற்றுக் கொண்டார். தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் உறுதி மொழியை வாசிக்க தலைவர் பதவியை அவர் ஏற்றுக் கொண்டார். உறுதிமொழியை ஏற்ற பிறகு அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி செந்திநாதன் வழங்கினார். தொடர்ந்து மற்ற நிர்வாகிகளும் பதவியேற்றுக் கொண்டனர்.