பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி | 'தாய்கிழவி' நல்ல லாபம்; அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் | சூரி, ரவிக்குமார் படத்தின் கதை என்ன தெரியுமா... | என்னை வேறொரு கோணத்தில் காட்டும் படம்: ஜதின் சர்னா |

சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை தழுவி கேப்டன் பிரபாகரன் முதல் ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கிறது. சின்னத்திரை தொடர்களும் வெளிவந்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது வீரப்பனின் முழு வாழ்க்கையும் வெப் தொடராக தயாராகிறது. இதனை ஏற்கெனவே வீரப்பனின் வாழ்க்கையை கன்னடத்தில் வீரப்பன் அட்டகாஹசா என்ற பெயரிலும், தமிழில் வனயுத்தம் என்ற பெயரிலும் படமாக இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார். இந்த தொடரும் கன்னடம், தமிழில் தயாராகிறது. கிஷோர் வீரப்பனாக நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாராக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வெப் தொடருக்கு தடை கேட்டு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வழக்கு தொடர்ந்துள்ளார். பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் ஏற்கெனவே ஏ.எம்.ஆர் ரமேஷ் வீரப்பனை கொடுமைக்காரனாக சித்தரித்து வீரப்பன் அட்டஹாசா என்ற தலைப்பில் படமாக இயக்கினார். இப்போது மீண்டும் அதனை தொடராக இயக்குகிறார். தொடரின் முழு ஸ்கிரிப்டும் எனக்கு வழங்கப்பட வேண்டும், என் அனுமதியின்றி படமாக்க கூடாது. என்று அந்த மனுவில் கூறியிருக்கிறார்.