பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தமிழகத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சி செஸ் ஒலிம்பியாட் பற்றி தான். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. நேற்று இந்த போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பல கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. அதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இந்த வாழ்த்துப்பாடல் பாடிய குழுவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகளான ஆராதனாவும் இணைந்து பாடினார். தற்போது ஆராதனா பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆராதனா இதற்கு முன்னர் 'கனா' படத்தில் 'வாயாடி பெத்த புள்ள' பாடலை பாடி அந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.