தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
பாடகியாக இருந்து நடிகையாக மாறிய மிகச் சில நடிகைகளில் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸும் ஒருவர். நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் தமிழ் மற்றும் மலையாளத்தில் கடந்த 15 வருடமாக தனது இடத்தை தக்க வைத்துள்ளார் மம்தா மோகன்தாஸ். இதனால் உள்ளூரில் மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் மம்தா மோகன்தாஸுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது..
இந்தநிலையில் சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மம்தா மோகன்தாஸ் அப்போது அந்த நிகழ்வில் கலந்துகொண்ட சல்மான்கானை சந்தித்து உரையாடியுள்ளார்.. அதன்பின் அங்கு நிருபர்களிடம் பேசியபோது சல்மான்கானுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்... மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர்களான அபிஷேக் பச்சன் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோருடனும் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மம்தா..