பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

90களின் மத்தியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி திரையுலகில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தியவர் நடிகை சிம்ரன். அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவர், தற்போது மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸை துவங்கியுள்ளார். அந்த வகையில் அவர் சமீபத்தில் எடுத்த மூன்று படங்களும் வெற்றியை பெற்றதுடன் சிம்ரனின் நடிப்புக்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. குறிப்பாக டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் சிம்ரனுக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்து விட்டது.
இந்த நிலையில் சிம்ரன் தனது திரை பயணம் ஆரம்பித்தது குறித்து கூறும்போது, “தமிழில் நான் படங்களில் அறிமுகமாவதற்கு முன்பாக மலையாளத்தில் தான் அறிமுகமானேன். மம்முட்டியுடன் இந்திர பிரஸ்தம் என்கிற படத்தில் நடித்தேன். மலையாளத்தில் நான் நடித்த ஒரே படமும் அதுதான். இங்கே தமிழில் டெல்லி தர்பார் என்கிற பெயரில் வெளியானது. இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் அவருடன் நடித்தது மறக்க முடியாதது. சமீபத்தில் கூட அவருடைய பஷுக்கா திரைப்படம் பார்த்தேன். இன்று வரை அவர் மாறவே இல்லை. என்னுடைய தம்பி சுமித்தும் இந்த படத்தில் நடித்திருந்தார். மம்முட்டியை பொறுத்தவரை அவர் ஒரு ஐகானிக் நடிகர். ரஜினி சாரை போல அவரும் எங்களைப் போன்ற மற்ற மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கிறார்” என்று தனது வியப்பை வெளிப்படுத்தி உள்ளார்.