அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கடந்த சில வருடங்களாகவே தங்களது அபிமான நடிகர்கள் நடித்து வரும் படங்களுக்கு அவர்களது ரசிகர்கள் அப்டேட் கேட்டு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், இயக்குனர்களை தொந்தரவு செய்து வருவது ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது. குறிப்பாக தமிழில் அஜித் நடிக்கும் படங்களின் தகவல்கள் பெரிய அளவில் வெளியாகாமல் ரகசியமாகவே பாதுகாக்கப்படும் என்பதால், அவரது ரசிகர்கள் பிரதமர் மோடி வரை அப்டேட் கேட்டு அதை வைரல் ஆக்கினார்கள்.
இந்த நிலையில் தெலுங்கில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்திற்கு சமீபகாலமாக அப்டேட் எதுவும் வெளியாகாததால் விரைவில் அப்டேட் வெளியிடுமாறும் இல்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் ரசிகர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் படங்கள் நீண்ட தாமதத்திற்கு பிறகு வெளியானதால் தோல்வியை தழுவின என்றும், சலார் படத்தை உரிய நேரத்தில் சீக்கிரமாக முடித்து வெளியிட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அந்த ரசிகர் கடைசி வரிகளை ரத்தத்தில் எழுதியதுபோன்று சிவப்பு நிற எழுத்துக்களால் எழுதியுள்ளார்.
இப்படிப்பட்ட ரசிர்களை என்னவென்று சொல்வது. மாய உலகமான சினிமா மோகம் இவரை எந்தளவுக்கு தள்ளி உள்ளது என பலரும் அதிர்ச்சி உடன் வேதனைப்படுகின்றனர்.