ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இன்றைய ஓடிடி யுகத்தில் தியேட்டர்களில் வெளியாகும் ஒரு படம் நான்கு வாரங்களுக்குள்ளாகவே ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அதனால், தியேட்டர்களில் வெளியாகும் படங்களைக் கூட கொஞ்சம் பொறுமையாகக் காத்திருந்து ஓடிடியில் பார்த்துக் கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு டப்பிங் படம் தமிழகத்தில் தியேட்டர்களில் வெளியாகி நான்கு வாரங்களுக்கும் மேலாக இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பது ஆச்சரியம்தான். அந்தப் பெருமையை 'கேஜிஎப் 2' படம் பெற்றுள்ளது. படத்தில் கேஜிஎப்பின் 'டான்' ஆக ராக்கி பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யஷ் தமிழ் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுவிட்டார்.
அப்படத்துடன் வெளிவந்த 'பீஸ்ட்' படம் கூட கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டது. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில தியேட்டர்களில் மட்டும் ஓரிரு காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு வந்த பல நேரடி தமிழ்ப் படங்கள் ஓரிரு நாட்களில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டுவிட்டன. கடந்த வாரம் சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' படம் கூட வெளிவந்தது. எத்தனை 'டான்'கள் வந்தாலும் 'கேஜிஎப் டான் ராக்கி பாய்' இன்னமும் அசைக்க முடியாத டானாகவே இருக்கிறார். தமிழகத்தில் மட்டும் 125 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்கிறார்கள்.
கோடை விடுமுறை ஆரம்பமாகியுள்ளதாலும், இன்னமும் ஓடிடி வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பதாலும் இந்த வாரமும் 'கேஜிஎப் 2' தாக்குப்பிடிக்கும் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.