இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

இன்றைய ஓடிடி யுகத்தில் தியேட்டர்களில் வெளியாகும் ஒரு படம் நான்கு வாரங்களுக்குள்ளாகவே ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அதனால், தியேட்டர்களில் வெளியாகும் படங்களைக் கூட கொஞ்சம் பொறுமையாகக் காத்திருந்து ஓடிடியில் பார்த்துக் கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு டப்பிங் படம் தமிழகத்தில் தியேட்டர்களில் வெளியாகி நான்கு வாரங்களுக்கும் மேலாக இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பது ஆச்சரியம்தான். அந்தப் பெருமையை 'கேஜிஎப் 2' படம் பெற்றுள்ளது. படத்தில் கேஜிஎப்பின் 'டான்' ஆக ராக்கி பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யஷ் தமிழ் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுவிட்டார்.
அப்படத்துடன் வெளிவந்த 'பீஸ்ட்' படம் கூட கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டது. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில தியேட்டர்களில் மட்டும் ஓரிரு காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு வந்த பல நேரடி தமிழ்ப் படங்கள் ஓரிரு நாட்களில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டுவிட்டன. கடந்த வாரம் சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' படம் கூட வெளிவந்தது. எத்தனை 'டான்'கள் வந்தாலும் 'கேஜிஎப் டான் ராக்கி பாய்' இன்னமும் அசைக்க முடியாத டானாகவே இருக்கிறார். தமிழகத்தில் மட்டும் 125 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்கிறார்கள்.
கோடை விடுமுறை ஆரம்பமாகியுள்ளதாலும், இன்னமும் ஓடிடி வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பதாலும் இந்த வாரமும் 'கேஜிஎப் 2' தாக்குப்பிடிக்கும் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




