பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் | பிப்ரவரி 13 ரிலீஸ் படங்கள் : இன்றைய நிலவரம் என்ன ? | ஒரு மாதம் விடுமுறை எடுக்கப் போகும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக்: உதவி இயக்குனராக பணியாற்றிய ரஜினிகாந்த் | பிளாஷ்பேக் : அதிக படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியவர் | என் சினிமா வாழ்க்கையே முடிந்தது என நினைத்தேன் ; அக்ஷய் குமார் வெளியிட்ட அதிர்ச்சி தருணம் |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ளது.
தெலுங்கு, கன்னட மொழியில் வெளியாகி பான்-இந்தியா படமாக வசூலைக் குவித்த படங்களுக்கு பதில் சொல்லும் விதமாக தமிழில் இந்தப் படம் அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
இப்படத்தின் இரண்டு பாகங்களின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.125 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் 1000 கோடி வசூலைக் கடந்தால்தான் தமிழ் சினிமாவுக்குப் பெருமை.
மணிரத்னம் இயக்கி கடைசியாக வெளிவந்த படம் 'செக்கச் சிவந்த வானம்'. அப்படத்திற்குப் பிறகு 'பொன்னியின் செல்வன்' படத்திற்காக மட்டுமே அவர் உழைத்து வருகிறார். மணிரத்னம் 'டச்' உடன் 'பொன்னியின் செல்வன்' இருந்தால் 1000 கோடி வசூல் எளிதுதான்.




