டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ளது.
தெலுங்கு, கன்னட மொழியில் வெளியாகி பான்-இந்தியா படமாக வசூலைக் குவித்த படங்களுக்கு பதில் சொல்லும் விதமாக தமிழில் இந்தப் படம் அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
இப்படத்தின் இரண்டு பாகங்களின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.125 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் 1000 கோடி வசூலைக் கடந்தால்தான் தமிழ் சினிமாவுக்குப் பெருமை.
மணிரத்னம் இயக்கி கடைசியாக வெளிவந்த படம் 'செக்கச் சிவந்த வானம்'. அப்படத்திற்குப் பிறகு 'பொன்னியின் செல்வன்' படத்திற்காக மட்டுமே அவர் உழைத்து வருகிறார். மணிரத்னம் 'டச்' உடன் 'பொன்னியின் செல்வன்' இருந்தால் 1000 கோடி வசூல் எளிதுதான்.




