ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் நடிகர் தனுஷ் எங்கள் மகன், அவர் எங்களை பராமரிக்க வேண்டும் எனறு பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மேலூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தனுஷ் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மேலூர் தம்பதிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் போலியானது என்று மேலூர் தம்பதிகள் மதுரை ஜூடியசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த குற்றச்சாட்டிற்கு போதிய முகாந்திரம் இல்லை என இந்த மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்தது.
இத்தோடு இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக கருதிய நிலையில், தற்போது மேலூர் தம்பதிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் தனுஷின் பிறப்பு சான்றிதழின் உண்மை தன்மை அறிய சென்னை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு இன்னும் வரவில்லை. அதற்கு முன்னதாக எங்கள் வழக்கை தள்ளுபடி செய்ததற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதனால் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சென்னை மாநகராட்சி தனுஷின் பிறப்பு சான்றிதழ் உண்மையானதுதான் என்று சான்றளித்தால் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.